செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 445 ரூபாயாகவும், கோவைக்கு 225 ரூபாயாகவும் இருந்த கட்டணம் தற்போது 275 ரூபாயாகவும் இரா,ணகுளத்திற்கு 345 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 425 ரூபாயாகவும், பெங்களூருக்கு 420 ரூபாயாக இருந்த கட்டணம் 520 ரூபாயாகவும், திருப்பதிக்கு 390 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 505 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் பணிபுரியும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி தங்களது சொந்த ஊரை மறந்து விட வேண்டியது தான் என்றும், ஆண்டிற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்பவர்கள் இனி பல ஆண்டுக்கு ஒரு முறைதான் குடும்பத்துடன் வந்து செல்ல முடியும் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.
kadayanallur